வாழ்க்கை தேடல் கற்று கொடுத்த பாடம்..

தேடல்!! உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Courtesy: http://bit.ly/148SRz7


"தேடல் இல்லா வாழ்க்கை கடலினில் விடப்பட்ட காகித கப்பலை போல திசையறியாது மூழ்கி போகும் "


கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரின் கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே அதற்கான தகுதியை நம் கல்வி முறை கற்று கொடுக்கிறதா என்றால் அங்கு பெரும் கேள்விக்குறி தான் நம் முன் நிற்கும். கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடி வரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை ,பை  நிறைய சம்பளம் , மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்.


இங்கு வரும் பெரும்பாலானோர் கற்றுகொள்ள விரும்பவில்லை,கற்றதை விற்கவே விரும்புகின்றனர்.அப்படியே நாம் விற்க விரும்பினாலும் இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை. வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசை தான்,அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை,பெரும்பாலானோருக்கு அது பல முறை தோல்வியை தான் பரிசளித்திருக்கிறது. கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதை விட மோசம் இரண்டு உலகங்கள் அறிமுகமில்லா உலகம் அறிமுகமில்லா மனிதர்கள் என் பார்க்கும் அனைத்தும் இங்கு புதிதாக தான்  இருக்கும். 
" இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லி கொடுக்காத பாடத்தை ஒரு வருட தேடல் கற்று கொடுத்துவிடும்,எது நிரந்தரம் யார் நம் சொந்தம் என்று".
ஒரு அழகிய பாடல் வரி

 "இருட்டினிலே நீ நடக்கையிலே நிழலும் உன்னை விட்டு பிரிந்து விடும்,
நீ மட்டும் தான் உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்"

முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி,அனுபவம் இரண்டு மட்டும் போதாது அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிகொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது உன் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்று கொண்டே இருக்க வேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில் தேர்ந்தெடுத்த துறையில் உனக்கு நிகர் யாரும் இல்லையென்று சாதித்து காட்ட வேண்டும். 

தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்த தேடல் மாறிகொண்டே தான் இருக்கும்.தேடல் ஒன்றே நிரந்தரம்.
Life


"உன்னிடம் தோற்க உலகமே  காத்திருக்க ,இந்த சிறு தோல்விக்காக ஏன்  கலங்குகிறாய் "

தேடு தேடு உன் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடு. வெற்றி உன்னை தழுவும் வரை தேடிகொண்டே இரு. வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்......



வாழ்க்கை தேடல் கற்று கொடுத்த பாடம்.. வாழ்க்கை தேடல் கற்று கொடுத்த பாடம்.. Reviewed by Unknown on Wednesday, June 26, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.